Pages

Saturday, May 7, 2011

படித்ததில் பிடித்தது - காசி ஆனந்தன் பக்கம்..



ஆணாதிக்கம்
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

பால்
என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்


மாவீரன்
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;


அரண்

என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்


இறுதியாக.. ஆனால் இறுதி அல்ல.. 



மனிதன்

இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்....


2 comments:

பனித்துளி சங்கர் said...

இறுதிக் கவிதை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டியது

Vela said...

நன்றி... 'Word Verification'-ஐ நீக்கி விட்டேன்

Post a Comment