Pages

Saturday, October 1, 2011

காலையும் பகலும்



I am not a Tamil-Pro.. I just scribble something out of my own choice that I pick when I am hunting down for something else... This is that kind of hunt.. one of my favorite...





காலையும் பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் 
பொழுதிடை தெரியிற் பொய்யே காம 
மாவென மடலொடு மறுகிற் றோன்றித் 
தெற்றெனத் தூற்றலும் பழியே 
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.
    
                - குறுந்தொகை - 32 

This one tends me to do a whole lot of research about the words being used.... காட்சி பொருள், கருப்பொருள் எல்லாம் பேசும்முன், First lets look into these lines...

காலையும் பகலுங் கையறு மாலையும் 
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

காலை, பகல், மாலை, யாமம், விடியல்.. இவ்ளோ தான.. இல்ல...ஒவ்வொரு 4 மணி நேரமம் வேற வேற...
மாலை - 6 - 10;                              யாமம் - 10 - 2
வைகறை - 2- 6;                              காலை - 6 - 10
பகல் - 10 - 2;                               பிற்பகல் - 2 - 6

"வைகறை துயில் எழு" 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் - குறள் - 1227

Now lets move on to the next word
மாவென மடலொடு - மடலேறுதல் என்றால் என்ன செய்வார்கள்?  குதிரை போல பனைமடல் மேல் ஏறிக்கொள்வார்கள். எருக்கம்பூவைச் சூடிகொள்வார்கள். பிறர் சிரித்தாலும் மதிக்க மாட்டார்கள். 
So why should they do like that? மானம் போனால் உயிர் போச்சு. அப்படி வாழும் காலத்துல ஏன் அப்படி செய்யணும்.. தான் கொண்டுள்ள காதல் தான் சிறந்தது.. ஊர் கேலி பேசினாலும் போதும், தன் காதல் தான் வேண்டும்.. தான் தலைவி இன்றி வாழ இயலாது என்பதாக எடுத்து கொள்ளலாம். I know there is a lot to discuss on this topic, but I am leaving the debate for a later time ...

Now lets go into the meaning of the poem.. This are the words from Thalaivan to Thozhi..

காலைப்பொழுதும், உச்சிப் பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும், ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியலும் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோற்று மாயின், அத்தகையோருடைய காமம் உண்மை அன்று; பிரிவு வருமாயின், அப்போது, பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து, தெருவில் வெளிப்பட்டு, யாவரும் இன்னாளால் இவன் இச் செயல் செய்தானென்று தெளியும்படி தலைவி செய்த துயரைப் பலர் அறியச் செய்தலும் பழிக்குக் காரணமாகும்; அது செய்யாது உயிரோடு வாழ்ந்திருத்தலும் பழிக்குக் காரணமாகும்.


0 comments:

Post a Comment