Pages

Monday, October 10, 2011

Guna - அபிராமி அந்தாதி - A Controversy Song.. !!!



அபிராமி அந்தாதி - A Controversy Song..


I love this day on making such a wonderful hunt about my longtime wish to write about the song from Guna movie 'Partha Vizhi'.. This song is being so criticized because of the words that is being used... But when realized about the inner meaning, its really amazing.. a complete treat.. The words were so awesome as I neither can't demonstrate, nor put into clear meaning. Someone who preaches 'Anthathi' should play a role on this...


Now lets move on to the topic... 

அபிராமி அந்தாதி 
ஆசிரியர்: 'அபிராமி பட்டர்'

ஒருவர் அபிராமி பட்டரிடம் இது என்ன நாள் என்று கேட்க அவரோ 'பௌர்ணமி' என்று சொல்லி இருக்கார்.. எல்லோரும் எள்ளி நகையாட கடைசில அரசரிடமும் அதே பதில்.. அரசரும் கோபம் கொண்டு 'இன்று பௌர்ணமி' இல்லை என்றல் 'அபிராமி பட்டறை' கொன்றுவிட ஆணை இட்டு சென்று விட்டார்...

அபிராமி பட்டர், தேவி அபிராமியிடம் 'உன்னை நினைந்தே நான் உலகை மறந்து இவ்வாறு ஆனேன்'.. நீயே வந்து காக்க வேண்டும் என்று கூறி பாடல் பாட துவங்கினார்.. இறுதியாக தேவி அபிராமி தன் காதில் உள்ள தோடை கழற்றி விண்ணில் எரிய விண்ணெங்கும் ஒளி பரவ அபிராமி பட்டர் பிழைத்தார்... 

அந்தாதி என்றல் என்ன? அந்தாதி என்றல் எந்த வார்த்தையில் முதல் பாடல் முடிகிறதோ அதே வார்த்தை கொண்டு அடுத்த பாடல் துவங்க வேண்டும்.. இதுவே அந்தாதி.. 

Now.. Lets move onto the song., 

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, முது 
வடங்கொண்ட கொங்கை - மலைகொண்டு இறைவர் வழிய நெஞ்சை 
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின் 
வடம் கொண்ட அல்குல் பணிமொழி - வேதப் பரிபுரையே.. 

பாடல் - 42 

பொருள்:

அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில்(மார்பு) புரளுகின்றது.. உம்முடைய தனங்களோ ஒன்றுகொன்று இடமின்றி பருத்து உள்ளது.. இந்த கொங்கைகளாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனதை ஆட்டுவிக்கின்றது.. தேவியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குல் கொண்டவளே.. குளிர்ச்சியான மொழி கொண்டவளே.. வேதச் சிலம்புகளை திருவடிகளில் அணிந்து கொண்டவளே தாயே.. !!!

Are you disgusted with the direct meaning.. If so, change your mind.. It is not a description or an poem about women's anatomy.  If we dig a more about the meaning, here are the points...

1] தனங்களின் அழகு
2] அவை எவ்வாறு சிவனை ஆட்கொள்கிறது
3] அல்குல் (You may have refer google)...
4] குளிர் மொழி
5] வேதங்களே அணிகலன்கள்...

பெண்மையின் அழகே தனங்கள், அவை பாலூட்டும் போது பெண்மை நிறைவு பெறுகின்றன.. அல்குல் இந்த இடத்துல 'தாய்மடியாக' உவமை  எடுத்துகொள்க.. குளிர்மொழி - தாலாட்டு.. வேதங்கள் அணிகலன்களாக உள்ளபோழ்து குழந்தையின் பாதுகாப்பு உறுதிப்படுகின்றது.. 

So, சுருக்கமாக எவரெல்லாம் தேவி அபிராமியை தாயாக ஏற்றுக்கொள்கிறார்களோ அவருக்கெல்லாம் தேவியின் அருள் கிட்டும் என்பதே பாடுபொருள்.. 

I knew this is a very sensitive lines and I believe I made a decent translation over this., I made my best effort in collecting data about this. Kindly bare with me and if possible correct me, if there were any., 




0 comments:

Post a Comment